×

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 27: அரசு போக்குவரத்துக் கழக ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 77 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதிய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.   ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு மாவட்டத்தலைவர் பிச்சைராஜன் தலைமை தாங்கினார். மாநகர துணை மேயர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கை தொடர்பான மனு கலெக்டர் அனீஷ்சேகரிடம் வழங்கப்பட்டது.


Tags : Transport Corporation Pensioners Association ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...