ராமநாதபுரம், மே 27: ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக்கிடம், தமுமுக மாநில செயலாளர் சலீமுல்லா கான் சார்பில் அளித்த மனு: ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டில் கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி தமிழகம் முழுவதும் தமுமுக உள்ளிட்ட சில கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலுவை வழக்குகளை ஒரு சிலவற்றை ரத்து செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆணை வெளியிட்டது. திரும்ப பெறுவதாக அறிவித்த சில வழக்குகள் விசாரணையில் உள்ளது. இதில், முதுகுளத்தூர், திருவாடானை கோர்ட்களில் விசாரணையில் உள்ளது.இந்த வழக்குகள் தமிழக அரசின் உள்துறை சார்பில் திரும்ப பெறுவதாக அறிவித்தும், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் சார்பில் உரிய தகவல்களை தாக்கல் செய்யாததால், நிலுவை வழக்குகளாக தொடர்கின்றன. இந்த வழக்குகளை தமிழக அர