×

பரமக்குடி அருகே நில மோசடி புகாரில் 3 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம், மே 27:  பரமக்குடி  அருகே அக்ரமேசி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (61). இவரிடம், அதே  பகுதியை சேர்ந்த கோதண்டம், நிலபுரோக்கர் பாண்டி ஆகியோர் நெய்வேலி  விஜயராமனுக்கு சொந்தமான நிலம் பரமக்குடியில் இருப்பதாக கூறியுள்ளனர்.  மேலும் அந்நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இதன்படி எமனேஸ்வரம் பகுதியில் இரண்டே முக்கால் சென்ட் நிலத்தை ரூ.2.50  லட்சம் கொடுத்து விஜயராமனிடம் 2012 பிப்.20ல் கோவிந்தன் வாங்கினார். கிரைய  பத்திரத்தில் கோதண்டம், பாண்டி சாட்சி கையெழுத்திட்டனர்.

இந்நிலத்தில்  கோவிந்தன் வீடு கட்டுவது சம்பந்தமாக பரமக்குடி நகராட்சி அலுவலகம் சென்று  நிலப்பெயர் பதிவை சரிபார்க்க சென்றார். அப்போது அந்நிலம் சதாசிவம் பெயரில்  உள்ளது தெரியவந்தது. தனக்கு இடம் வாங்கி கொடுத்த புரோக்கர்கள் கோதண்டம்,  பாண்டியிடம், கோவிந்தன் இதுகுறித்து கேட்டபோது, இடத்தை சரிசெய்து தருவதாக  உறுதியளித்தனர். ஆனால் இதுவரை சரிசெய்து கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.  எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு  போலீசில் கோவிந்தன் புகார் அளித்தார். மேலும் இது சம்பந்தமாக  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து, வழக்குப்பதிவு செய்ய  உத்தரவு பெற்றார். இதன்படி ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு போலீஸ்  இன்ஸ்பெக்டர் ராமநாதன் மோசடியில் ஈடுபட்ட விஜயராமன், கோதண்டம், பாண்டி மீது  வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்

Tags : Paramakudi ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு