கும்பகோணம், மே 27: குடந்தை நகரில் 50வது பொன்விழா ஆண்டை நோக்கி பயணிக்கும் ஏஆர்ஆர் கல்வி குழுமம் சார்பாக கிரிக்கெட் பயிற்சி அகாடமி ஏஆர்ஆர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கப்பட்டது. இதனை குடந்தை நகர் மன்ற துணை மேயர் தமிழழகன் துவக்கி வைத்து பேசினார். பள்ளி தாளாளர் சுப்ரமணியம், செயலர் வைத்தியநாதன் தலைமை ஏற்க, கல்வி ஆலோசகர் மற்றும் இரு பள்ளி முதல்வர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகள் பயிற்சி அகாடமியில் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.