கறம்பக்குடி, மே27: கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தூர்வாரும் பணியை ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் கருப்பசாமி ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கடைமடை பகுதிகளான பாப்பாபட்டி, கிலாங்காடு, கீராத்தூர் மற்றும் 12 ஊராட்சிகளில் 21 வேலைகள் தேர்வு செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாளர்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த தூர்வாரும் பணிகளில் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் கருப்பசாமி தலைமை வகித்து கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த தூர்வாரும் பணி ஆய்வின் போது மாவட்ட உதவி இயக்குனர் மகாதேவன் ரமேஷ், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சிகள் நளினி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் தமிழ் செல்வன், ஒன்றிய அலுவலக மேலாளர் மயில்வாகனன், ஒன்றிய மேலாளர் நிர்வாகம் கணேசன், ஒன்றிய பொறியாளர், ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற அலைவார்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.