×

உசிலம்பட்டிக்கு கடத்தி வந்த 750 கிலோ குட்கா பறிமுதல் 5 பேர் கைது

உசிலம்பட்டி. மே 26: உசிலம்பட்டி பகுதிக்கு சட்டவிரோதமாக குட்கா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தலைமையில், உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் கண்ணாத்தாள் உள்ளிட்ட போலீசார் உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேனியிலிருந்து வந்த இரு கார்களையும், ஒரு டூவீலரையும் சோதனை செய்ததில் 67 மூட்டைகளில் 750 கிலோ குட்கா கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது.
குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் தொடர்பாக உசிலம்பட்டி கொங்கப்பட்டியைச் சேர்ந்த ஜெயவீரன், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராமச்சந்திரன், விக்னேஷ், அம்பரீஷ், சங்கர் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Usilampatti ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...