×

வக்பு வாரிய அதிகாரி புகாரில் 20 பேர் மீது வழக்கு

திருப்பூர், மே 26: திருப்பூர் காதர்பேட்டை  அஹ்லே கன்னத் ஜமாத் பள்ளிவாசல் வக்பு வாரிய ஆய்வாளர் அன்வர் அலி வடக்கு போலீஸ் நிலையத்தில்் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:கடந்த 7-ந் தேதி பள்ளிவாசலின் வக்பு ஆய்வாளராக பொறுப்பேற்றேன். 11-ந் தேதி வக்பு வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தை பூட்டி சீல் வைத்து பணி மேற்கொண்ட போது, முன்னாள் தலைவராக இருந்த சலீம் உள்ளிட்டவர்கள் பணி செய்ய விடாமல் தடுத்தனர். சீல் வைக்கப்பட்ட பூட்டை கடந்த 13-ந் தேதி உடைத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என அதில் கூறியிருந்தார். இது தொடர்பாக வடக்கு போலீசார் சலீம் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags : Waqf Board ,Officer ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...