×

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 3 இடங்களில் அங்கன்வாடி, பள்ளி கட்டிடங்கள் திறப்பு

பட்டுக்கோட்டை, மே 26: பட்டுக்கோட்டை வட்டத்தில் 3 இடங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய அங்கன்வாடி மற்றும் பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார். பட்டுக்கோட்டை வட்டம், தாமரங்கோட்டை வடக்கு ஊராட்சிக்குட்பட்ட தாமரங்கோட்டை மேலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.16.66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தில் உள்ள வகுப்பறையில் குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து சேண்டாகோட்டை ஊராட்சியில் ரூ.10.08 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும், அதிராம்பட்டினம் நகராட்சியில் ரூ.16.66 லட்சத்தில் பள்ளிக் கட்டிடத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் வடக்கு பார்த்திபன், மேற்கு சத்தியவிஜயன், அதிராம்பட்டினம் நகராட்சித் தலைவர் தாஹிராம்மாள், துணைத் தலைவர் ராமகுணசேகரன், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Anganwadi ,Pattukottai ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்