பூதப்பாண்டி,மே 26: பூதப்பாண்டியை அடுத்துள்ள நாவல்காடு நம்பியான் குளம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (60). தேங்காய் வெட்டும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் ஒரு தோப்பில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் வெட்டும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே நல்லதம்பி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.