ஒட்டன்சத்திரம், மே 25: ஒட்டன்சத்திரம் லெக்கையன்கோட்டையிலிருந்து அரசப்பபிள்ளைபட்டி வரை பழநி மார்க்கமாக செல்ல மேம்பாலம் அமைத்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. லெக்கையன்கோட்டையிலிருந்து வரும் நான்கு சக்கர வாகனங்கள் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் கோயம்புத்தூர், திருப்பூர் செல்லும் போது தடுப்புச்சுவர் இருப்பதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி, அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கூறியதன் பேரில், தற்போது தடுப்புச்சுவற்றில் 18 மீட்டர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துகள் ஓரளவு குறையும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.