×

‘நெஞ்சுக்கு நீதி’ சினிமா பார்த்த அமைச்சர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதியோர்களை பராமரிக்க ஏற்பாடு

திருப்பூர், மே 21:  முதியோர்களை வீடுகளில் பராமரிப்பதை போல் மருத்துவமனையில் பராமரிக்க தமிழக அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அந்த திட்டத்தின்படி அரசு மருத்துவமனைகளில் முதியோர் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இதனால் அவசர வேலையாக செல்கிறவர்களின் வீடுகளில் முதியோர்கள் இருந்தால் அரசு மருத்துவமனைகளில் கொண்டு சென்றுவிட்டு செல்லலாம்.

மேலும், அவர்கள் பாதுகாப்பாகவும் இங்கு இருப்பதால் பலரும் இந்த முதியோர் பராமரிப்பு மையத்தை அணுகி பயன்பெறும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதியோர் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 படுக்கை வசதிகளும் உள்ளன. இங்கு வருகிற முதியோர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது. இதனால் இந்த சேவையை பயன்படுத்த விரும்புகிறவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Minister ,Tirupur Government Hospital ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...