×

புதுகை ஆயுதப்படை மைதானத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் ஆன 24 வாகனங்கள் ஏலம்

புதுக்கோட்டை, மே 20: புதுக்கோட்டையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் உரிமை கோரப்படாத 24 வாகனங்களை காவல்துறையினர் ஏலம் விட்டதையடுத்து ஏராளமானோர் போட்டி போட்டு ஏலம் எடுத்த நிலையில் இன்ஜினே இல்லாத ஒரு மினி சரக்கு வாகனத்தை அதிக விலைக்கு ஏலம் விட்டதால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஏலம் எடுக்க மறுப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வாகனங்களை யாரும் உரிமை கோராத நிலையில் அந்த வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஆயுதப்படை மைதானத்தில் 21 இருசக்கர வாகனங்கள் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் ஒரு மூன்று சக்கர வாகனம் என மொத்தம் 24 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இதனையடுத்து அந்த வாகனங்களை ஏராளமானோர் போட்டி போட்டு ஏலம் கேட்ட நிலையில் டாடா ஏஸ் மினி சரக்கு வாகனத்தின் இன்ஜின் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இல்லாத நிலையில் அந்த வாகனம் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த ஏலம் எடுக்க வந்தவர்கள் அந்த வாகனத்தை அதிக விலைக்கு ஏலம் எடுத்துச் சென்று ஒன்றும் செய்யமுடியாது என்று கூறி ஏலம் எடுக்க மறுப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த இன்ஜின் இல்லாத வாகனத்தை கடைசிவரை யாரும் ஏலம் எடுக்காமல் சென்றனர்.

Tags : Budugai Armed Forces Grounds ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது