×

மூர்த்திபாளையம் மதுரை வீரன் சுவாமி கோயில் திருவிழா

வேலாயுதம்பாளையம், மே 20: கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம் பகுதியில் உள்ள மதுரைவீரன் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் கோவில் பூசாரி சாமி வேல் எடுத்து காவிரி ஆற்றுக்கு சென்று அங்கு புனித நீராடினர். பின்னர் சாமி வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாமி வேலுடன் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளையம்மாள், பொம்மி, மதுரைவீரன் சாமிக்கு பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து மா விளக்கு எடுத்து வந்து கோவில் வளாகத்தில் வைத்து மாவிளக்கு பூஜையும் செய்தனர். அதனைத் தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் கோவில் வளாகத்தில் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மேல் மதுரைவீரன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags : Murthipalayam Madurai Veeran Swami Temple Festival ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு