×

அரவக்குறிச்சியில் அரசு சார்பில் பொது மின் மயானம் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி, மே 20: அரவக்குறிச்சியில் அரசு சார்பில் பொது மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளபட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும் உள்ளன. இதில் நூற்றுக் கணக்கான கிராமங்கள் உள்ளன. பள்ளபட்டி மற்றும் அரவக்குறிச்சியில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளிலும் நவீன பிரேத பரிசோதனை கூடங்கள் உள்ளன.

அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்திலோ அல்லது வேறு காரணங்களால் உயிர் இழப்பவர்களை அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் உயிரிழப்பவர்கள் உடலை தகனம் செய்ய மின்மயானம் இல்லை. இதனால் 50 கிமீ தொலைவிற்கு அப்பால் உள்ள கரூருக்கு கொண்டு சென்று தான் மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டிய சிரமமான சூழ் நிலை உள்ளது. இதனால் இறந்தவரின் உடலை தகனம் செய்ய பலமணி நேரம் ஆகின்றது. தேவையில்லாமல் போக்குவரத்து பணச் செலவும் ஆயிரக்கணக்கில் ஏற்படுகின்றது.

இதனால் உயிரிழப்பு ஏற்பட்டு சோகமான உள்ள நிலையில் ஏற்படும் இந்த பணச் சுமையினால் நடுத்தர வார்க்க மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அரவக்குறிச்சி பகுதியை மையமாக கொண்டு அரசு மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவக்குறிச்சி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சியின் சுற்றுப் பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...