×

டிஎன்பிசி குரூப் 2 தேர்வு 94 மைங்களில் 39,795 பேர் எழுத ஏற்பாடு கலெக்டர் தகவல்

விருதுநகர், மே 18: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டிஎன்பிசி குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கு மே.21 அன்று நடைபெற உள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கூறுகையில், மாவட்டத்தில் 94 தேர்வு கூடங்களில் 137 தேர்வு மையங்களில் 39,795 பேர் எழுத உள்ளனர். தேர்வு மைய கண்காணிப்பில் 137 முதன்மை கண்காணிப்பாளர்கள், 199 ஆய்வு அலுவலர்கள், 26 மொபைல் பார்டி, 13 பறக்கும் படை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 137 தேர்வு மையங்களுக்கும் 143 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் வட்டத்தில் 13 தேர்வு மையங்கள், அருப்புக்கோட்டை வட்டத்தில் 23, ராஜபாளையம் வட்டத்தில் 22, சாத்தூர் வட்டத்தில் 9 சிவகாசி வட்டத்தில் 17, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 10 என 94 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு அறைக்கு வரவேண்டும். தேர்வர்கள் அறைக்கு வந்த பின் விடைத்தாள் கொடுக்க வேண்டும். ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் மட்டும் கொடுக்கப்படும். நுழைவுசீட்டு இல்லாமல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கால்குலேட்டர், மொபைல் போன் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வு கண்காணிப்பாளர்களும் செல்போன் பயன்படுத்த கூடாது, என்றார். கூட்டத்தில் நேர்முக உதவியாளர் காளிமுத்து, சார் ஆட்சியர் பிருதிவிராஜ், கோட்டாட்சியர்கள் கல்யாணகுமார், புஷ்பா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : DNBC Group ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு