×

சுரைக்காய்பட்டியில் தார்ச்சாலை அமைக்க பூமிபூஜை

சின்னாளபட்டி, மே 18: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், சுரைக்காய்பட்டி கிராமமக்கள் சுரைக்காய்பட்டியில் இருந்து கோம்பை செல்லும் பகுதியில் தார்ச்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதி மக்களுக்கு தார்ச்சாலை அமைத்துக் கொடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு மாநில நிதிக்குழு மானிய நிதி (2019-20) ரூ.47 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை சுரைக்காய்பட்டியில் நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, ஒன்றிய குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவருமான ப.க.சிவகுருசாமி தார்ச்சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் முருகன், ராஜேஷ், கிளைச் செயலாளர்கள் மனோகரன், பிரபு, புதுப்பட்டியைச் சேர்ந்த உதயகுமார், ஒப்பந்தகாரர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஊராட்சி மன்ற செயலாளர் இன்னாசி நன்றி கூறினார்.

Tags : Bhoomipooja ,
× RELATED கம்பத்தில் பூங்கா அமைப்பதற்கு...