காரைக்கால், மே 18: காரைக்கால் கோட்டுச்சேரியில் 3 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பஸ் நடத்துனரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பிராந்தியம் கோட்டுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதியில் வசிப்பவர் மணிவண்ணன் (37). தனியார் பஸ் நடத்துனரான இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவர் தனக்கு அறிமுகமான நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்த 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.