×

விருத்தாசலம் அருகே பஸ் மீது லாரி மோதல்: 20 பேர் படுகாயம்

விருத்தாசலம், மே 14:விருத்தாசலத்தில் இருந்து நேற்று காலை சுமார் 7 மணி அளவில் சிதம்பரம் நோக்கி சுமார் 30 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பொன்னேரி பைபாஸ் ரவுண்டானாவில் சென்றபோது, நெய்வேலியில் இருந்து அரியலூர் நோக்கி சாம்பல் பவுடர் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டாரஸ் லாரி பேருந்து மீது மோதியது.இதில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் படுகாயமடைந்தனர். லாரியை ஓட்டி வந்த நெய்வேலி அருகே ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வேல்ராஜ், கால் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து விருத்தாசலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவ
மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடந்து வருவதால் பேரிகார்டு மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Vriddhachalam ,
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு