×

அசானி புயலால் 4 நாட்களுக்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்

வேதாரண்யம், மே 14: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அசானி புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 4 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தது.மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது இன்று (நேற்று) பைபர் படகுமீனவர்கள் மீன்பிடிக்க. செல்லலாம் என மீன் துறை அறிவிப்பு செய்தனர். இதையொட்டி நேற்று மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். 4 நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் நேற்று அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உற்சாகமாக மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

Tags : Asani ,
× RELATED சென்னையில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து