×

உத்தமபாளையத்தில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா

உத்தமபாளையம், மே 13: உத்தமபாளையத்தில் வழக்கறிஞர்கள்  சங்கத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர்களுக்கு  பாராட்டு விழா மற்றும் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. உத்தமபாளையம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் (பார் அசோசியேசன்) சார்பாக மூத்த வழக்கறிஞர்களுக்கு  பாராட்டு விழா மற்றும் வழக்கறிஞர் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, உத்தமபாளையம்  வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் (பார் அசோசியேஷன்) டாக்டர் வழக்கறிஞர் பார்த்திபன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் அழகுமலை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை வழக்கறிஞர்கள் முத்துக்குமரன்,  வனிதா காளியப்பன் ஆகியோர் செய்தனர்.

சிறப்பு அழைப்பாளராக உத்தமபாளையம்  சார்பு நீதிபதி கன்யா தேவி, உத்தமபாளையம் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவணசெந்தில்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார், விரைவு நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு, 40 வருடங்களை பூர்த்தி செய்த வழக்கறிஞர்கள் கருணாகரன், சாகுல்ஹமீது, சந்திரசேகர்,  அந்தோணிராஜ்,  கோவிந்தன் உள்ளிட்ட 31க்கும் மேற்பட்டவர்களை  பாராட்டி கவுரவப்படுத்தினர்.
 தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு, பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி முடிவில் வழக்கறிஞர் தீன் முகமது நன்றி கூறினார்.

Tags : Uthamapalaiyam ,
× RELATED உத்தமபாளையத்தில் பழுதான லாரியால் 10 மணிநேரம் டிராபிக்