மானாமதுரை, மே 13: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குவளைவேலி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மதுசூதனன்ரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் தமிழரசன் வரவேற்றார். முகாமில் வருவாய்த்துறை சார்பாக 46 நபர்களுக்கு பட்டாவும், 20 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகையும்,12 நபர்களுக்கு குடும்ப அட்டைகளும், மருத்துவத்துறை சார்பாக 10 நபர்களுக்கு மருந்துப் பெட்டகமும், 4 தாய்மார்களுக்கு மகப்பேறு நிதி உதவியும், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 11 நபர்களுக்கு தனி நபர் இல்லக் கழிப்பறையும், 4 சமுதாய உறிஞ்சு குழிகளும், வேளாண்மைத் துறை சார்பாக 5 நபர்களுக்கும், தோட்டக்கலைத் துறை சார்பாக 7 நபர்களுக்கும் என மொத்தம் 123 பயனாளிகளுக்கு சுமார் ரூ.16 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதனன்ரெட்டி, எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார் ஆகியோர் வழங்கினர்.