×

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டம்

திருப்புத்தூர், மே 13: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரை தேர் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும். உற்சவ துவக்க விழாவை முன்னிட்டு கடந்த 5ம் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் முதல்நாள் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை மற்றும் இரவில் சுவாமி சிம்மம், அனுமார், கருட சேவை, சேஷ, வெள்ளி யானை, தங்க, குதிரை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு நடைபெற்றது.
8ம் நாளாள நேற்று இரவு சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடந்தது. 9ம் திருநாளான இன்று மாலை திருத்தேருக்கு தலையலங்காரம் கண்டருளல் நடைபெறும். 10ம் நாளான நாளை காலை 8 மணியளவில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். மாலை 5.10 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். 12ம் திருநாளான மே 16ம் தேதி இரவு பெருமாள் தேவி, பூமிதேவியாருடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

Tags : Thirukkoshtiyur Perumal Temple ,
× RELATED திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில்...