×

டாஸ்மாக் கொள்ளையில் 3 பேர் கைது

ஆர்.எஸ்.மங்கலம், மே 13: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் பச்சனத்திகோட்டை அருகேயுள்ள டாஸ்மாக் கடையில், கடந்த மாதம் 5ம் தேதி கடையில் சூப்பர்வைசர் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சேல்ஸ்மேன் ராஜகோபாலனை அரிவாளைக் காட்டி மிரட்டியும்,வாட்ச்மேன் அர்ச்சுனன்(47) என்பவரை கட்டிப்போட்டு விட்டு கடையில் புகுந்து லாக்கரில் இருந்த ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாரந்தை பால்பாண்டி மகன் முத்துக்குமார்(எ)சேவாக் (22), சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உடைக்குளம் அழகர் மகன் வீரபாண்டி (22) இருவரையும் கைது செய்ததோடு, அடைக்கலம் கொடுத்த பொள்ளாச்சி சிடிசி காலனியை சேர்ந்த மதன்குமார்(34) என்பவரையும் கைது செய்த போலீசார் திருவாடானையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags : Tasmag ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு...