×

மூதாட்டியை கொன்ற வாலிபர் குண்டாசில் கைது

ராமநாதபுரம், மே 13: திருவாடானை அருகே மூதாட்டியை கொலை செய்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவாடானை அருகே ஆயிரவேலி பகுதியை சேர்ந்த ஜெயமங்கலம் மனைவி பூங்கோதை(65). கடந்த பிப்ரவரி மாதம் இவர் வீட்டில் தனியாக இருந்த போது 2 பேர் வீடு புகுந்து, அவரை தாக்கி வீட்டில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து மேலபனையூர் மாரிமுத்து மகன் கலைமணி(31), கீழபனையூர் முத்துராமலிங்கம் மகன் ஆதி(20) ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கலைமணி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் பரிந்துரையில், கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவில் ஆதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Kundas ,
× RELATED அமெரிக்க துணை தூதரகத்தில் போலி...