×

டூவீலர்கள் எரிப்பு வழக்கில் இருவர் கைது

மதுரை, மே 13: மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை கீழமாத்தூர் பள்ளிவாசல் 1வது தெருவில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் என்பவரது வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த 5 டூவீலர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்து எரித்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிந்து, சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் சம்பவ இடத்திற்கு வந்து டூவீலர்களுக்கு தீவைப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் கடுமையான குற்றங்கள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ. காசி மற்றும் தெப்பக்குளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முகம்மது இத்ரிஸ் மற்றும் தனிப்படையினர் இவ்வழக்கின் தொடர்புடைய குற்றவாளிகளான விரகனூர் குவாலிட்டி தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் ஜெயசூர்யா (25), மதுரை கிருஷ்ணாபுரம் 2வது தெருவை சேர்ந்த மாரிராஜன் மகன் செல்வக்குமார் (24) ஆகியோரை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...