×

துறையூர் கோயில் திருவிழாவில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

கோவில்பட்டி, மே 13:  கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள வெயிலுகந்தம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடந்தது. பெரிய வண்டி, சிறிய வண்டி என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளை அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார். 10 மைல் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த பெரிய மாட்டுவண்டி போட்டியில் 5 வண்டிகள் பங்கேற்றன. மஞ்சநாயக்கன்பட்டி பெருமாள்சாமி வண்டி முதலிடம் பிடித்து, ரூ.25,001 பரிசு பெற்றது. 2வது இடத்தை பிடித்த கே.சிவஞானபுரம் மந்திரமூர்த்தி வண்டிக்கு ரூ.23,001, 3வது இடம்பிடித்த தொட்டம்பட்டி பேச்சியம்மாள் வண்டிக்கு ரூ.21,001 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 6 மைல் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த சிறிய வண்டி போட்டியில் 11 வண்டிகள் கலந்து கொண்டன. கச்சேரி தளவாய்புரம் வண்டி முதலிடத்தை பிடித்து ரூ.20,001 பரிசு பெற்றது. 2வது இடம்பிடித்த சீவலப்பேரி துர்காம்பிகா வண்டிக்கு ரூ.18,001, 3வது இடம்பிடித்த கடம்பூர் எஸ்.வி.எஸ்.பி.கருணாகர ராஜா வண்டிக்கு ரூ.16,001 பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ் பாண்டியன், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்புராஜ், கருப்பசாமி மதிமுக மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய முன்னாள் செயலாளர் போடுசாமி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அதிமுக பாசறை மாவட்ட செயலாளர் துறையூர் கணேஷ்பாண்டியன் செய்திருந்தார்.

Tags : Cow ,Ride ,Thuraiyur Temple Festival ,
× RELATED உடையார்பாளையம் அருகே அனுமதியின்றி...