×

லாரி மோதி தொழிலாளி பலி

நெல்லை, மே 13:  ராமையன்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (47). கூலி தொழிலாளி. கடந்த ஒரு வாரமாக பாளை யிலுள்ள ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு  வீட்டிற்கு  மொபட்டில் புறப்பட்டார். நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது சுரண்டையிலிருந்து மூலைக்கரைப்பட்டிக்கு வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பால் லாரி திடீரென எதிரே வந்த மொபட் மீது மோதி அங்கிருந்த மின் கம்பத்திலும் மோதியது. இதில் மொபட்டில் வந்த ஆறுமுகம் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக  அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு பொறுப்பு இன்ஸ்பெக்டர் திருப்பதி, எஸ்ஐ நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து தனியார் பால் லாரி டிரைவரான சுரண்டை அடுத்த மரியதாய்புரத்தைச் சேர்ந்த மரியஜோசப் ராஜூ (31) என்பவரை கைது செய்தனர்.

Tags : Larry ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி