×

4 சிறுவர்கள் உட்பட 14 பேர் பரிதாப பலி

ஜல்பைகுரி: மேற்கு வங்க மாநிலம், ஜல்பைய்குரி மாவட்டத்தில் துப்குரி நோக்கி நேற்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில், திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஒரே பகுதியை சேர்ந்த பலர் சென்று கொண்டு இருந்தனர். ஜல்தாகா சாலையில் தவறான பாதையில் கார் சென்றதாக தெரிகிறது. அப்போது, அந்த வழியாக கற்கள் ஏற்றிவந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 சிறுவர்கள் உட்பட 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். விபத்தில் காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடுமையான பனி மூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்  தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். அதேபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ரூ.2.5 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார். …

The post 4 சிறுவர்கள் உட்பட 14 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Jalpaiguri ,Dupguri ,Jalpaiguri district, West Bengal ,
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி