×

ஒரத்தநாடு அருகே மணல் கொள்ளை வழக்கு 3 பேர் குண்டாசில் கைது

ஒரத்தநாடு, மே 12: ஒரத்தநாடு அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட நெய்வேலி அக்னி ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆனது. அதன் பேரில் தஞ்சை எஸ்பி., ரவளிபிரியா உத்தரவின் பேரில் ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னாவின் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில் அடிப்படையாகக் கொண்டு மணல் அள்ளிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. நெய்வேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த திருமேணி(42), அண்ணாதுரை(52), சசிகுமார்(42) ஆகிய 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Orathanadu ,
× RELATED ஒரத்தநாடு அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு