×

நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்

குன்னம், மே 12: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரிய வெண்மணி கிராமத்தில் உள்ள நாச்சாரம்மன், மாணிக்க அம்மன், மாக்காயிஅம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலை நாச்சாரம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18 வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாச்சாரம்மன், மாணிக்க அம்மன், மாக்காயி அம்மன்களுக்கு மலர்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இந்த தேரோட்டத்தில் கொளப்பாடி, சின்னவெண்மணி, புதுவேட்டகுடி, காடூர், நல்லறிக்கை, வேப்பூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். குன்னம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Nacharamman Temple Therottam ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...