×

கடன் தொல்லையால் அவதி காரைக்காலில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

காரைக்கால்,மே12: காரைக்கால் அடுத்த திருவேட்டக்குடி கோயில்மேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் மகன் வேல்(எ) வேல்முருகன்(43). டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வருகிறார்.இவர் திருவாருரை சேர்ந்த மகாலிங்கம் மகள் விஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரோஜினி ஜீவா(11),புவனேஸ்வரன்(8) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.வேல்முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.விஜி பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.அதனால் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டற்கு வந்து கொடுத்த கடனை கேட்டு வந்துள்ளனர்.இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படும்.நேற்று முன்தினம் விஜி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.இதனால் தாய் சாந்தி மகனுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மனவேதனையில் உள்ள வேல்முருகன் படுக்கை அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.பின்னர் அவரது தாய் சாந்தி மற்றும் உறவினர்கள் வேல்முருகனை மீட்டு காரைக்கால் மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருந்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக கோட்டுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...