×

திருப்பூர் மாவட்டத்தில் இன்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

திருப்பூர், மே 12: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) பவானி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்ட (கொடிவேரி) கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், ரூ.224 கோடி மதிப்பில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 7 பேரூராட்சிகள் முதல் 547 கரையோர ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். திருமூர்த்தி அணை தளி வாய்க்கால் நீர் ஆதாரமாக கொண்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், ரூ.2.68 கோடி மதிப்பில் மடத்துக்குளம், உடுமலை ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 318 ஊரக குடியிருப்புகள் மற்றும் 5 பேரூராட்சியில் காண கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கலெக்டர் அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் காணொலி நிகழ்ச்சியில் தமிழக செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் பங்கேற்கிறார். மேலும் 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்கிறார்.

Tags : Minister ,MB Saminathan ,Tirupur district ,
× RELATED சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம்...