அன்னூர்,மே12: அன்னூர் அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. முன்னதாக துவக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அம்பாள் எஸ்.ஏ.நந்தகுமார் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மிஸ்டர் தமிழ்நாடு சதீஷ்குமார் கலந்து கொண்டு நிகழ்சிகளை துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்களுக்கு 100 மீ ,200 மீ,400மீ ஓட்டப்பந்தயம், 800மீ தொடர் ஓட்டம் மற்றும் பல்வேறு குழு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒட்டுமொத்த சாம்பியனுக்கான கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் பள்ளியின் அறங்காவலர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.