கோவை, மே.12: கோவை அரசு கலை கல்லூரியில் முதுகலை பொருளியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் பொருளியில் சங்க துவக்கவிழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற நீதிபதி முகமது ஜியாபுதின் கலந்து கொண்டார். கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவர் ஷோபா, பொருளியல் துறையின் உதவி பேராசிரியர் இளங்கோ, முதல்வர் கலைசெல்வி, நேரு கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.