×

சேந்தமங்கலம் அருகே விபத்தில் வாலிபர் பலி

சேந்தமங்கலம், மே 11: சேந்தமங்கலம் அடுத்துள்ள பச்சுடையாம்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மகன் கோபிநாத்(22). இவர் ஐடிஐ முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.
நேற்று முன்தினம் டூவீலருக்கு மாத தவணை கட்டுவதற்காக ராசிபுரம் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காளப்பநாயக்கன்பட்டி அடுத்த திருமலைபட்டி பிரிவில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு டூவீலர் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த கோபிநாத் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chentamangalam ,
× RELATED சேந்தமங்கலம் அருகே பாறைக்கு வைத்த...