×

சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைசாமிபுரம் ஊராட்சிகளுக்கு தடையில்லா மின்சாரம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ கோரிக்கைக்கு அமைச்சர் பதில்

சென்னை, மே 11: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் (திமுக) பேசுகையில், ‘ராஜபாளையம் தொகுதியில் உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி மற்றும் மேலூர் துரைசாமிபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு சேத்தூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் செல்கிறது. ஆனால், அதில் தென்னை மரம் விழுவதினால் மின்தடை ஏற்பட்டு சொக்கநாதன்புத்தூர் மற்றும் மேலூர் துரைசாமிபுரத்தில் உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நேற்றுகூட (நேற்று முன்தினம்) அந்த மாதிரி மரம் விழுந்து மின்சாரம் போயிருக்கிறது. அது சம்மந்தமாக பள்ளி மாணவர்கள் என்னிடம் பேசினார்கள். தென்காசி மாவட்டம் சிவகிரியின் அருகில் துணை மின்நிலையம் இருக்கிறது.

தயவு செய்து, அங்கேயிருந்து மின்சாரம் கொடுத்தீர்களென்றால், சொக்கநாதன்புத்தூர் மற்றும் துரைசாமிபுரத்திலும் பிரச்னையில்லாமல் இருக்கும் என்பதால், அதைக் கொடுக்க முன் வருவார்களா? என்றார். இதற் பதில் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், ‘துணை மின்நிலையங்களிலிருந்து மாற்றி அந்த மின்விநியோகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உறுப்பினர் எடுத்துச் சொல்லியிருக்கின்றார். அது சம்மந்தமாக துறைக்கு அறிறைத்தப்பட்டிருக்கிறது. எனவே, இரண்டொரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Minister ,Thangapandiyan ,MLA ,Sokkanathanputhur ,Melur Duraisamypuram ,
× RELATED இந்தியாவின் வெற்றிக் கணக்கு...