×

திருவாரூர் மாவட்டத்தில் 14ம் தேதி ரேஷன் கடைகளில் மக்கள் குறைதீர்முகாம்

திருவாரூர், மே 11: திருவாரூர் மாவட்டத்தில் வரும் 14ம் தேதி ரேஷன் கடைகளில் பொது மக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு வரும் 14ம்தேதி காலை 10 மணியளவில் கீழ்க்காணும் நியாய விலை கடைக்களுக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாமில் குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கை மனுக்களை வழங்கலாம்.

அதன்படி, திருவாரூர் தாலுகா திருக்கண்ணமங்கை நியாயவிலைக்கடைக்குட்பட்ட குடும்பஅட்டைதாரர்களும், நன்னிலம் தாலுக்கா நெம்மேலி நியாய விலைக்கடைக்குட்பட்ட குடும்பஅட்டைதாரர்களும், குடவாசல் தாலுகா சேங்காலிபுரம் நியாயவிலைக்கடைக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களும், வலங்கைமான் தாலுகா பாடகச்சேரி நியாயவிலைக்கடைக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களும், மன்னார்குடி தாலுகா மழவராயநல்லூர் நியாயவிலைக்கடைக்குட்பட்ட குடும்பஅட்டைதாரர்களும், நீடாமங்கலம் தாலுகா அரிச்சபுரம் நியாயவிலைக்கடைக்குட்பட்ட குடும்பஅட்டைதாரர்களும், கூத்தாநல்லூர் தாலுகா காவனூர் நியாயவிலைக்கடைக்குட்பட்ட குடும்பஅட்டைதாரர்களும், திருத்துறைப்பூண்டி தாலுகா ஆலத்தம்பாடி நியாயவிலைக்கடைக்குட்பட்ட குடும்பஅட்டைதாரர்களும் இக்குறைதீர் முகாமில் தங்கள் குடும்பஅட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், புதிய குடும்பஅட்டை மற்றும் நகல் அட்டைகோரும் மனுக்கள், கைபேசிஎண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறித்த புகார்கள் குறித்தும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur district ,
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...