×

பழநி அருகே ரயிலில் அடிபட்டு எலக்ட்ரீசியன் பலி

பழநி, மே 11: பழநி அருகே   சின்னக்கலையம்புத்தூரை சேர்ந்தவர் சரவணக்குமார் (46). எலக்ட்ரீசியன். இவர்  நேற்று முன்தினம் மாலை பழநி சண்முகநதி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை  கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ்  ரயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரவணக்குமார் சம்பவ  இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த பழநி ரயில்வே எஸ்ஐ பொன்னுசாமி தலைமையிலான  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணகுமாரின்  உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக பழநி ஜிஹெச்சிற்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்