×

மலேசியாவில் கொத்தடிமையாக உள்ள மகனை மீட்டுத்தர வேண்டும் பெற்றோர் மனு

விருதுநகர், மே 10: விருதுநகர் கலெக்டரிடம் சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த சர்க்கரைராஜ் தனது மனைவியுடன் நேற்று மனு அளித்தார். மனுவில், எங்கள் மகன் மாரீஸ்வரன்(27), 2016ல் அருப்புக்கோட்டை குருந்தமடத்தை சேர்ந்த நாகராஜ் மூலம் மலேசியாவில் உள்ள ஓட்டலில் வேலைக்கு சென்றார். கடந்த 6 ஆண்டுகளாகியும் மகனிடம் இருந்து எந்த தகவலும், பணம் எதுவும் வரவில்லை. மகனை மலேசியா ஓட்டல் உரிமையாளர் கொத்தடிமையாக வைத்து சித்திரவதை செய்கிறார். ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து இன்று வரை உரிய பதில் கிடைக்கவில்லை. மகன் மாரீஸ்வரனை மீட்டுத்தர வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Tags : Malaysia ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...