×

இரு குழந்தைகளுடன் தாய் மாயம்

விருதுநகர், மே 10: விருதுநகர் அருகே சதானந்தபுரத்தை சேர்ந்தவர் வைரமுத்து(30), பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்து கணபதி(28). 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்த முத்து கணபதி கடந்த ஒருவாரமாக வேலைக்கு செல்லவில்லை. வைரமுத்து வேலைக்கு சென்ற நிலையில், மனைவி முத்து கணபதி, இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பல இடங்களில் தேடியும் மனைவி, குழந்தைகள் கிடைக்காததால் வச்சக்காரப்பட்டி போலீசில் வைரமுத்து புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ