×

கல்லட்டி சுற்று வட்டாரத்தில் மழையால் சேதமான பகுதிகளை கலெக்டர் ஆய்வு

ஊட்டி, மே 10:  ஊட்டி அருகே கல்லட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 7ம் தேதி நள்ளிரவில் கொட்டிய கனமழை காரணமாக கால்வாயில் பாறைகள் அடித்து வரப்பட்டு 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுடன் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலை காய்கறிகள் சேதமடைந்தன. இப்பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைக்குந்தா சுற்று வட்டார பகுதிகளான மேல் கல்லட்டி, அழகர்மலை, சோலாடா, ஆல்காடு, தட்டனேரி, அம்மனாடு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 7ம் தேதி இரவு 10 மணியளவில் இடியுடன் கூடிய அதீத கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த மழை காரணமாக சிறு சிறு பாறைகள் மண் உள்ளிட்டவை கால்வாய் வழியாக அடித்து வரப்பட்டு கல்லட்டி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. சிறு சிறு பாறைகள் அடித்து வீடுகளின் வாசல்கள் முன்பு குவிந்தன. மேலும் இப்பகுதியில் உள்ள நடைபாதையை முழுமையாக அடித்து செல்லப்பட்டதுடன், மண் மற்றும் பாைறகள் கால்வாயில் தேங்கின.
 
குடிநீர் குழாய்கள், கழிவுநீர் கால்வாய் போன்றவை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மழை காய்கறி ேதாட்டங்களுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிப்பட்டிருந்த மலை காய்கறிகள் அடித்து செல்லப்பட்டன.

Tags : Kallatti ,
× RELATED விபத்துக்களை தவிர்க்க கல்லட்டி...