×

கோவில்பட்டி அருகே பைக்குகளில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

கோவில்பட்டி, மே 10: கோவில்பட்டி அருகே பைக்குகளில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நாலாட்டின்புதூர் எஸ்ஐ ஆர்தர்ஜஸ்டின் மற்றும் தனிப்படை போலீசார், லிங்கம்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் 2 பைக்குகளில் வந்த 3 பேரை நிறுத்தி சோதனையிட்டனர். பைக்குகளில் 3 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். விசாரணையில் அவர்கள், கோவில்பட்டி புதுரோடு காளியப்பர் தெருவை சேர்ந்த காளிராஜ் மகன் அருண்குமார் (28), சண்முகா நகர் பேச்சிமுத்து மகன் சின்ராஜ் (29), சாஸ்திரி நகர் ராமையா மகன் சங்கிலிபாண்டி (33) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Tags : Kovilpatti ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா