×

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 420 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை

கடலூர், மே 10:  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 420 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து  தீர்வு காணவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  இதில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் துறை ரீதியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது. மேலும் கூட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவினை முன்னிட்டு சிறப்பு பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட விளையாட்டு, குறள் ஒப்பித்தல்,  நாடகம், நடனம், பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் இடத்தில் வெற்றி பெற்ற 5 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், தனித்துணை ஆட்சியர்  கற்பகம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

Tags : People's Briefing Day ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...