×

நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி, மே 10: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்காததை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நெய்வேலி வட்டம்-8. தந்தை பெரியார் சாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிட கழக மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் தலைமை தாங்கினார். திராவிட கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசுகையில் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கவும், என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு என்எல்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார். இதில் திராவிட கழக செயல் தலைவர் அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் ஜெயக்குமார், காப்பாளர் ஜெயராமன், மண்டல தலைவர் பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் தம்பி பிரபாகரன், மண்டல செயலாளர் தாமோதரன், நெய்வேலி நகர இளைஞரணி செயலாளர் மாணிக்கவேல், சூழல் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திராவிடன், என்எல்சி தொமுச நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Neyveli ,
× RELATED சென்னையில் இருந்து விக்கிரவாண்டி,...