×

ரம்ஜானையொட்டி இன்று மதியம் வரை ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்கும்

சேலம், மே 3: ரம்ஜான் பண்டிகையையொட்டி, இன்று (3ம் தேதி) அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாளில், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்கும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், சேலம் டவுன், ஆத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள முன்பதிவு மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறைப்படி பாதி நாள் மட்டும் இயங்குகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா