×

திருவில்லி. பகுதியில் 1000 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவில்லிபுத்தூர், மே 3: திருவில்லிபுத்தூர் காவல்நிலைய உட்கோட்ட பகுதிகளில் மே1ம் தேதியான நேற்று முன்திவம் அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மதுப்பாட்டிலை பறிமுதல் செய்ய டிஎஸ்பி சபரிநாதன் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருவில்லிபுத்தூர் காவல் நிலைய உட்கோட்டத்திற்குட்பட்ட திருவில்லிபுத்தூர், மல்லி, மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன்கோவில், நத்தம்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி மதுவிற்பனை செய்ய வைத்திருந்த சுமார் 1000 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvilli ,
× RELATED திருவில்லியில் இன்று மின்தடை