×

அருப்புக்கோட்டை அருகே முயல் வேட்டையாடியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திருவில்லிபுத்தூர், மே 3: அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராம பகுதியில் முயல் வேட்டை நடப்பதாக வனப்பாதுகாப்பு படை அதிகாரி மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரி செந்தில் ராகவன் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் பாலவநத்தம் குவாரி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்அப்போது வாலிபர் ஒருவர் வேட்டையாடிய முயல் உடன் வந்து கொண்டிருந்தார் அவரை பிடித்து விசாரித்ததில் பாலவநத்தம் பகுதியை சேர்ந்த பாண்டியராஜ் (32), என்பதும், கொத்தனாராக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரிடமிருந்து உயிருடன் இருந்த 2 முயல்களையும், இறந்த நிலையில் ஒரு முயலையும் மற்றும் வேட்டையாட பயன்படுத்தப்படும் கம்பி வலை பொருட்கள், ஒரு டூவீலர் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவற்றை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு, பாண்டிராஜுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags : Aruppukottai ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்