×

சிங்கம்புணரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை

சிங்கம்புணரி, மே 3: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கே.இடையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி(55). இவர் குடும்பத்துடன் நேற்று வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்ற அவர், மாலையில் வீடு திருப்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் இரண்டு அறைகளில் இருந்த 3 பீரோக்களை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் காணாமல் போனதாக புழுதிபட்டி போலீசில் பழனிச்சாமி புகார் தெரிவித்தார். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Singampunari ,
× RELATED போலி மதுபான ஆலையில் 3,020 லிட்டர் ஸ்பிரிட் 500 மது பாட்டில் பறிமுதல்