×

அதிமுக சார்பில் மே தின பொது கூட்டம் காங்கயம் நகராட்சி பகுதிகளில் ரூ.81 லட்சத்தில் வளர்ச்சித் திட்டப்பணி

காங்கயம், மே 3:  காங்கயம் நகராட்சிகுட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்சிகளில் ரூ.81 லட்சத்தில்  வளர்ச்சித்திட்டப்பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். இதில் காங்கயம் நகராட்சி வார்டு எண் 1 ஏ.சி நகரில் பகுதியில் 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டும் பணி, வார்டு எண் 2 பாராதியார் வீதியில் 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட பி.வி.சி டேங்க் அமைக்கும் பணி, வார்டு எண் 3 தொட்டியபட்டியில் ஏற்கனவே பழுதடைந்த 2 பி.வி.சி குழாய்களை புதியதாக மாற்றியமைத்தல், அதே வார்டில் மூர்த்தி ரெட்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 20000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, உள்ளிட்ட ரூ.81 லட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகளை துவக்கி வைத்தார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். இதில் காங்கயம் திமுக நகர செயலாளர் காயத்திரி சின்னசாமி,  காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன், செயற்பொறியாளர் திலீபன், உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Tags : Day ,AIADMK ,Kangayam ,
× RELATED பாலைவன பூமியான துபாயில் ஒரு ஆண்டில்...