×

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு,மே3: ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் செயபிரகாசம் தலைமை தாங்கினார். இதில், பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரே நாடு, ஒரே கல்வி முறை, ஒரே தேர்வு முறை என மாநில உரிமைகளை பறித்து, சமூக நீதியை புதைக்கும் நீட், சியூஇடி போன்ற தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் சிவில் உரிமை கழக மாநில தலைவர் கண குறிஞ்சி, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை ஜாபர் அலி, நீரோடை அமைப்பின் தலைவர் நிலவன், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் சிலம்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயராகவன் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : United States ,
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து